Press "Enter" to skip to content

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி? நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நாட்டிற்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி? நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை! | Prime Minister For Gotabaya Slpp Representatives

இன்றைய தினம் (25-08-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்க விருப்பமா என வினவினார்.

 

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி? நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை! | Prime Minister For Gotabaya Slpp Representatives

அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே,(Madhura Withanage)  “எங்களுக்கு விருப்பம்தான்.

கண்டிப்பாக வாக்களிப்போம்.” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட, “கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்த நாட்டுக்கு வரவேண்டும்.

 

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி? நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை! | Prime Minister For Gotabaya Slpp Representatives

அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி.

அப்படியானால் அவர் பிரதமர் ஆவதை யாருக்கு தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் இல்லை, அவர் கேட்டால் அவருக்கு வாக்களிப்போம்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *