மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியம் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சு, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மண்ணெண்ணெய் விலை உயர்வால் சிரமங்களை எதிர்நோக்கும் மீனவர்களுக்கு உடனடியாக மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விநியோகம் முறையாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கை மீனவர்கள் கடந்த 3 மாதங்களாக தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கடலுக்கு செல்லவில்லை என எரிபொருளை கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Be First to Comment