கனடாவில் கொலை குற்றத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 34 வயதான சதீஸ்குமார் ராஜரத்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை 11.40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் வீதி மற்றும் கிங்ஸ்டன் வீதி பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இதன் போது அங்கு கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான் நிலையில் இருந்த நபர் ஒருவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றனர். எனினும் அந்த நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் டொராண்டோவை சேர்ந்த 38 வயதான லியோன் டைரெல் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சதீஸ்குமார் ராஜரத்தினம் என்ற சந்தேக நபருக்கு கனடா முழுவதும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன், குறித்த நபர் ஆபத்தானவர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழனன்று, ராஜரத்தினம் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவில் ஆபத்தானவர் என தேடப்பட்ட தமிழர் கைது
More from UncategorizedMore posts in Uncategorized »
- பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
- பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு..!
- மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
- சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
- கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!
Be First to Comment