நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் நுகர்வுக்கான செலவு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளவிபரவியல் ஆய்வுகள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்த நுகர்வுக்கான செலவு 63 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.
எனினும் தற்போது குறித்த தொகை 47 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைகழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
Be First to Comment