முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பதை அறிந்து தாம் ஏமாற்றமடைந் துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ராமநாயக்கவை பார்த்ததில் மகிழ்ச்சி! அரசியலமைப்பின் 34 (1) (d) இன் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார் என்பதை அறிந்து ஏமாற்றமடைந்தேன். இது 34 (2) இன் கீழ் அவரது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுடனான முழு மன்னிப்பைக் காட்டிலும் அவரது தண்டனையை நீக்குவதாகும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் டுவீட் செய்துள்ளார்.
இதன் பொருள் அவர் அரசியல் பதவியை வகிக்கத் தகுதியற்றவர். முற்றிலும் ஏமாற்றம்! ” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Be First to Comment