Press "Enter" to skip to content

உயர்தர பரீட்சையில் செங்கலடி மத்திய கல்லூரி மாணவன் கணிதப்பிரிவில் தேசிய சாதனை

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள்வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியை சேர்ந்த லோ.கிசோபன் கணித துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் நான்காம் இடத்தினை பெற்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கொம்மாதுறையினை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் கணித பிரிவில் இந்த சாதனையினை படைத்து பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *