Press "Enter" to skip to content

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு எம்.பி.க்கள் சென்றுள்ளனர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பின்னர் பல எம்.பி.க்கள் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி நாட்டின் தலைசிறந்த தலைவர் எனவும், அவரின் உடல்நிலை குறித்து அறிய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் நலமுடன் இருக்கிறார். எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர் வீட்டில் இருக்கிறார் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

நேற்றிரவு நாட்டை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் திரான் அலஸ் ஆகியோர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *