Press "Enter" to skip to content

யாழ்.மாவட்டத்தில் பாண் விலை அதிகரிக்கப்படாது! மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

யாழ்.மாவட்டத்தில் பாண் விலையினை அதிகரிக்கவேண்டிய தேவை தற்போது இல்லை. என யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்க தலைவா குணரட்ணம் தொிவித்திருக்கின்றார்.

மாவட்டத்தில் பாண் விலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அது தொடர்ச்சியாக வழங்கப்படும். விலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. கொழும்பில் பாணின் விலை உயர்த்தப்படுவதற்காக

யாழ்.மாவட்டத்தில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை. 12 ஆயிரத்து 500 ரூபாவிற்கு பிறீமா நிறுவனத்தினரால் எமக்கு மா வழங்கப்படுகின்றது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 200 ரூபாய்க்கு மேல் பாணின் விலையினை அதிகரிக்க தேவையில்லை.

அவ்வாறு யாராவது பாணின் விலையினை அதிகரித்து விற்றால் அவர்களுக்குரிய எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதற்கான சலுகைகள் நீக்கப்படக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.

அதாவது வெதுப்பக உரிமையாளர்கள் யாராவது கோதுமை மா தேவைப்படுவோர் எமது சங்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்குரிய மாவினை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக் கொடுக்க முடியும்.

ஆனால் அதிக விலைக்கு பாணினை விற்க வேண்டிய தேவை இல்லை. பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா விலை உயர்த்தப்படும் வரை

பாணின் விலை யாழில் உயர்த்தப்படாது என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *