Press "Enter" to skip to content

விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால் எரிபொருள் விலை குறையும்!

எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால், உலக சந்தையில் உள்ள விலைகளுக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாயால் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு காணப்படுவதாக ஹர்ஷ எம்.பி சுட்டிக்காட்டினார்.

விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால் எரிபொருள் விலை  குறையும்! | If The Price Formula Is Implemented

எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் செயற்படுவதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதும் வரி செலுத்தியதன் பின்னர், அரசாங்கத்துக்கு தற்போது ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் இலாபம் கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

விலைச்சூத்திரம் தொடர்பில் சட்ட நிலை எதுவும் இல்லாத காரணத்தால் அரசாங்கம் விரும்பியவாறு செயற்பட முடியும் என்றார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *