Press "Enter" to skip to content

வன்னி கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த பின் தங்கியமாணவர்களுக்கு யாழ் இந்து கல்லூரியில் கல்வி கற்க வாய்ப்பு!

வன்னி பிரதேசம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளை சேர்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க ஆர்வமுள்ள மாணவர்கள் எமது பாடசாலையில் இணைந்து கல்வி கற்பதற்கான ஓர் சந்தர்ப்பத்தினை யாழ் இந்துக் கல்லூரி ஏற்படுத்தி தருகின்றது. அவர்களுக்கான விடுதி வசதியினை இலவசமாக வழங்குவதுடன் பாடசாலை நேரத்திற்கு மேலதிகமான கற்பித்தல் நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு எமது ஆசிரியர்கள் தயாரகவுள்ளனர். 2024 உயர்தர பிரிவிற்கு 30 மாணவர்களுக்கான அனுமதியினை வழங்கவுள்ளோம். எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கவும் என பாடசாலை நிர்வாகம் கோரியுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *