Press "Enter" to skip to content

போலி நாணயத் தாள்களை அச்சிட்ட ஐவர் கைது

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பகுதியில் போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய இயந்திரத்துடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குச்சவெளி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி பெற்றோலை கொள்வனவு செய்ய முயற்சித்த புல்மோட்டையைச் சேர்ந்த இரண்டு பேர் கைதாகினர்.

குறித்த இருவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலை அடுத்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுளனர்.

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர், திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *