Press "Enter" to skip to content

பாதசாரிகள் மீது மோதிய வேன் – யுவதி பலி! September 11, 2022 02:04 pm

கண்டி முல்கம்பல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் மூவர் மீதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மூன்று பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் வேனில் பயணித்த பெண் ஒருவருமாக 5 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், படுகாயமடைந்த பாதசாரி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹீருஸ்ஸகல பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *