கட்டணம் செலுத்தப்பட வேண்டிய மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் கிட்டத்தட்ட 14 நாட்களாக தரித்திருப்பதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.
இந்த எரிபொருள் கப்பல்களுக்கு கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொள்வதற்காக எண்ணெய் கூட்டுத்தாபனம் மத்திய வங்கியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கப்பல்கள் எப்போது விடுவிக்கப்படும் என குறிப்பிட்ட திகதியைக் கூற முடியாது என்றார்.
37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும், 100,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் ஏற்றிய ஒரு கப்பலும் மெலசா துறைமுகத்துக்கு அருகில் தரித்துள்ளன.
Be First to Comment