கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி, கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அத்துடன் சம்பவத்தில் மேலும் 2 இளைஞர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 27 வயதான எம்.எச்.எம். அல்பாப் என்ற இளைஞர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய 18 வயது சாரதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Be First to Comment