Press "Enter" to skip to content

வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் இளைஞர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22வயதான இளைஞர்  கைது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே  இரவு 8.00 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில்  வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும்  கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் 11 வாள்களை கைப்பற்றியதோடு குறித்த வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 22வயது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவை தமது பூசை வழிபாடுகளிற்கு பயன்படுத்தப்படுவதாக கைதான இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் தந்தையே ஆலயத்தில் பூசைகளில் ஈடுபடுவர்

மேலதிக  விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *