Press "Enter" to skip to content

கணவரை கொலை செய்த பெண் சட்டத்தரணி குடும்பத்துடன் கைது!

அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தில் கணவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொண்டு, அவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சட்டத்தரணியான பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக குறித்த நபர் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் 38 வயதுடையவர் எனவும் கைது செய்யப்பட்டவர்களில் அவரது 64 வயது சிறிய தந்தை மற்றும் 36 வயது சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது கணவர் தனக்குத்தானே அசிட் ஊற்றிக் கொண்டதாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி பெண் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் அநுராதபுரம் பிரதேசத்தில் பணிபுரிபவர் எனவும், சில காலமாக வெளிநாட்டில் இருந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மத்துகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *