Press "Enter" to skip to content

நினைவேந்தல் செய்ய இன்று முட்டிமோதுவோர் கோட்டபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின் எங்கிருந்தீர்கள்? சிவாஜி லிங்கம்.

நினைவேந்தல் நடத்துவதற்கு மோதிக் கொள்பவர்கள் கோட்டபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் எங்கிருந்தார்கள்? என கேள்வி எழுப்பியுள்ள வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,

கோட்டபாய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தியாகி திலீபனின் நினைவேந்தல் துாபி முன்னால் காகம் கூட பறக்கவில்லை. ஆனால் நான் கோண்டாவிலில் நினைவேந்தல் செய்து கைது செய்யப்பட்டேன் எனவும் கூறியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே எம் கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நினைவேந்தல்களில் பொதுவாக அனைவரும் இணைந்து அஞ்சலி செலுத்த வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு தியாக தீபம் தீலீபனின் நினைவேந்தலுக்கு காகம் கூட பறக்கவில்லை.

அப்போது நான் கோண்டாவில் பகுதியில் நினைவேந்தலை மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்பாட்டில் இல்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் இவ்வாறான நினைவேந்தலை முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள்,

தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் ஏட்டிக்கு போட்டியாக இல்லாமல் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *