Press "Enter" to skip to content

குருநகரில் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

குருநகரில் போதைப் பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட 11 வயது சிறுமி சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறுவர் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தாயாரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, அவரை சிறுவர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில்

சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *