Press "Enter" to skip to content

கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் கடந்த 1ம் திகதி இடம்பெற்றுள்ளது.

 

கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு! | Kilinochchi Street Accident Young Family Man Died

சுண்டிக்குளம் கல்லாறு பகுதியை சேர்ந்த குறித்த நபர், புளியம்போக்கணை பகுதியில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று மூன்று பேருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன் போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் புளியம்பொக்கணை பகுதியில் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு! | Kilinochchi Street Accident Young Family Man Died

படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மூவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு! | Kilinochchi Street Accident Young Family Man Died

கல்லாறு பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் பவிராஜ் என்ற 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *