அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தொழிற்சங்கத்தினர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் இணைந்து மேற்கொண்ட ஆர்பாட்ட பேரணி மீது காவல் துறையினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சற்று முன்னர் காவல் துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியை இடைமறித்து களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னதாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு தடையாக செயற்பட்டமையினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியை முன்னெடுத்தனர்.
” ஒடுக்கு முறையை நிறுத்து”
” சிறைப்பிடித்தாலும் நாங்கள் வருகை தருவோம்”
” துப்பாக்கி பிரயோகம் செய்தாலும் நாம் வருவோம் ”
” வீதிக்கு இறங்க நாம் அச்சம் கொள்ள மாட்டோம் ”
இவ்வாறான கோசங்களுடன் ஆர்பாட்டப் பேரணி நகர்ந்துச் செல்கையில் காவல் துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் காவல் துறையினருக்கு கூக்குரலில் கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்





Be First to Comment