பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று ஹிக்கடுவ பிரதான பாடசாலை மைதானத்தில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் 29 வயதுடைய பெண் எனவும், அவரிடம் 8 கிராம் 229 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரத்கம முகாமின் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பெண் ஒருவருடன் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த பெண் நீண்டு காலமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment