யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஊரிப் பகுதியில் 3 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை அச்சுவேலிப் பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
மேற்படி மாணவன் 3 லீற்றர் கசிப்பு மற்றும் 16 லீற்றர் கோடாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்த போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Be First to Comment