காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வாதரவத்தை பெரிய பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 30 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் போது 35 வயது உடைய நபர் கைது செய்யப்பட்டதாக காங்கேசன் துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





Be First to Comment