Press "Enter" to skip to content

இருபாலையில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 73 வயது முதியவர் கைது! சிறுமி கர்ப்பமாம்

யாழ்.இருபாலையில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 73 வயதான முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபாலையில் சைக்கிள் கடை நடாத்திவரும் 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த 13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார்.

குறித்த விடயம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் நேற்று வயோதிபரை கைது செய்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு முற்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் வயோதிபர் இன்று யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *