தாமரைக் கோபுரத்திலிருந்து ‘பங்கி ஜம்பிங்’ ஜனவரி முதல் ஆரம்பம்
Digital News Team 2022-10-08T12:47:36
-சி.எல்.சிசில்-
கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ (‘Go Bungy’) நிறுவனத்துக் கிடையே கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங்கை(Bungee Jumping) தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, தாமரைக் கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங் 2023 ஜனவரி 1 முதல் ஆரம்பிக்கப்படும்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
350 மீற்றர் உயரத்தில் இருந்து பாய்தல் நடத்தப்படும் என்பதுடன் ஒவ்வொரு நாளும் சுமார் 130 பாய்தல்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில், தாமரைக் கோபுரம் ஒளியூட்டப்பட்டவுடன், இரவு நேரத்தில் 30-40 பாய்தல்கள் நடைபெறும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
Be First to Comment