Press "Enter" to skip to content

கிளிநொச்சி மாவட்டத்தின் பண்பாட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழா ஆரம்பமானது. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் பண்பாட்டு பேரணி இன்று 2 மணியளவில் ஆரம்பமானது.

கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பமான பண்பாட்டு பேரணி A9 வீதி ஊடாக பசுமை பூங்காவை சென்றடைந்தது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

பண்பாட்டு பேரணியில், காவடியாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், சிலம்பாட்டம், பொம்மையாட்டம், கரகாட்டம், தமிழ் இன்னியம், பறை ஆகியன அலங்கரித்ததுடன், தமிழ் பெரும் அரசர்களின் ஊர்தியும் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நள்ளிரவு வரை காமன் கூத்து உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்வுகளும், கௌரவிப்புகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *