Press "Enter" to skip to content

கோட்டாவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக விகாரை கட்டிய கூலித்தொழிலாளி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக அலஹெர – மினிபுரகம கிராமத்தில் வசிக்கும் ஒருவர் பத்து இலட்சம் ரூபா செலவில் விகாரை ஒன்றை நிர்மாணித்து வழிபாடு செய்துள்ளார்.

அலஹெர – மினாபுர கிராமத்தைச் சேர்ந்த W.G.சந்திர சேன பண்டா (45) முன்பள்ளி ஒன்றிற்கு அருகாமையில் இந்த விகாரையை நிர்மாணித்து அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கியுள்ளார்.

கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் இந்த விகாரையை அவர் கட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தனவின் நினைவாக பிரசங்க பீடம் மற்றும் மேசை ஒன்றும் இவ் விகாரைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் பல பொது இடங்களில் ஐந்து விகாரைகளை  நிர்மாணித்துள்ள இவர், படைப்பிரிவின் கீழ் சேவையாற்றிய இராணுவ சிப்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *