Press "Enter" to skip to content

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் போதைக்கு அடிமையான தன் மகனை ஒப்படைத்ததுடன், “மகன் எனக்கு வேண்டாம்” என எழுதிக் கொடுத்த தாய்

போதைப் பொருளுக்கு அடிமையான 15 மகன் தனக்கு வேண்டாம் எனக்கூறி தாய் ஒருவர் எழுத்துமூலம் கடிதம் எழுதிக் கொடுத்து சுன்னாகம் பொலிஸாரிடம் மகனை ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் மேற்படி மகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர்

தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி,

தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து,

சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *