2015ஆம் ஆண்டு பிணை முறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பத்து பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என்ற அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு நீதிமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சமத் மொராயஸ், தமித் தோட்டாவத்த மற்றும் நாமல் பலல்ல ஆகியோர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட முடியாது எனக் குறிப்பிட்டு நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனையை தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நபராக பெயரிடப்பட்டுள்ள பேப்பச்சுவல் ட்ரரிஸ் லிமிட்டெட் ஒரு நிறுவனம் எனவும் அவர் வாதிட்டார்.
இந்த ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே நீதிமன்றில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
Be First to Comment