Press "Enter" to skip to content

வாள்வெட்டில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்த்தர் மரணம்!

வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 6ம் திகதி கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த வட்டக்கச்சி – மாயவனுார் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது33) என்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *