13 ஒக்டோபர் 2022
யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினை சேர்ந்தவர்களுக்களுடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரன கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
திக்கம் வடிசாலையை தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு பனை அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளமையை ஆட்சேபித்த, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினர், குறித்த முயற்சியை தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment