Press "Enter" to skip to content

யாழ்ப்பாணத்தில் லட்சக்கணக்கான பனைகள் இருக்கிறது ஆனால் தேடி அலைந்தும் எனக்கு பனம் கள்ளு கிடைக்கவில்லை! வருத்தப்பட்ட அமைச்சர்..

யாழ்.மாவட்டத்தில் அதிகளவான பனை மரங்கள் உள்ளபோதும் எனக்கு பனம் கள்ளு கிடைக்கவில்லை. என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த சிரிப்போடு வருத்தம் தொிவித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவித்த போதே லொகான் ரத்வத்த நகைச்சுவையாக இதனை தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ள இடமாக யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனம் கள்ளை தேடிய போது யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை என்றார்.

மேலும் தெரிவிக்கையில், இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி பொருட்களுக்கு மேற்குலக நாடுகளில் அதிக கேள்வி காணப்படுகின்றது, பனை அபிவிருத்தி கைத்தொழிலானது மிகவும் அபிவிருத்தி அடைவதோடு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும் என்றார்.

45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டுவந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்றைய தினம் சொந்தமானதொரு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *