Press "Enter" to skip to content

துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிப்பு! 28 பேர் பலி! நிலத்தடியில் பலர் சிக்கியுள்ளனர்

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 28 பேர் இறந்துள்ளனர்.

மேலும் பலர் நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பின் போது சுமார் 110 பேர் சுரங்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பாதி பேர் 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்தனர்.

வெடிப்பின் பின்னர்,11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவசரகாலக் குழுக்கள் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் சுரங்கத்தில் தங்கள் அன்புக்குரியவர்களின் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

இந்த வெடிப்பு சுமார் 300 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தநிலையில் சுமார் 300 முதல் 350 மீற்றர் வரையிலான ‘ஆபத்தான’ பகுதியில் சுமார் 49 பேர் பணிபுரிந்து வருவதாக உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்தார்.

குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

நிலக்கரிச் சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன், ஃபயர்டேம்பினால் வெடித்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக துருக்கியின் எரிசக்தி அமைச்சர் கூறினார்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் சனிக்கிழமை அந்த இடத்தை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில் துருக்கியின் மேற்கு நகரமான சோமாவில் ஏற்பட்ட வெடிப்பின்போது 301 பேர் உயிரிழந்தனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *