வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று மண்மேடுட்டில் சிக்கியிருந்த 48 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மண் மேட்டின் சிக்கியுள்ள மூவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் நேற்று ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது நேற்று ஆண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களை தேடும் பணி தொடர்கிறது
மண்சரிவில் சிக்கியிருந்த பெண் சடலமாக மீட்பு
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment