Press "Enter" to skip to content

பருத்தித்துறை – அல்வாயில் ஹெரோயின் மற்றும் நகைகளுடன கைதான சந்தேகநபர் பொலிஸ் நிலைய மலசல கூடம் வழியாக தப்பி ஓட்டம்..

பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் ஹெரோயின் மற்றும் தங்க நகைகளுடன் கைதான நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலருந்து தப்பி ஓடியுள்ளார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினால் அல்வாய் பகுதியில் நேற்றுமுன்தினம் 23 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிள், ஐ போன் மற்றும் 3 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டிருந்தது.

சந்தேக நபரை நேற்று நண்பகல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவிருந்த நிலையில் அவர் நேற்று காலை பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பித்துள்ளார்.

மலசல கூடத்தின் யன்னல் இடைவெளி ஊடாக அவர் வெளியேறி தப்பித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றயவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *