Press "Enter" to skip to content

பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை!

பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் இன்று(செவ்வாய்கிழமை) சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள பெற்றோலிய உற்பத்தி விசேட கட்டளைகளுக்கான திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெற்றோலிய விநியோக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர், கலாநிதி அசோக ரன்வல இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *