யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, ஊரிக்காடு பகுதியில் நபரொருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த நபர், ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment