Press "Enter" to skip to content

கல்வியங்காடு பகுதியில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்து கொள்ளை!

கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்து ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் கடந்த திங்கள் கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. விற்பனை நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பூட்டி வீட்டுக்கு சென்றிருந்த தருணத்தில் திருடன் துவிச்சக்கர வண்டியில் வந்து விற்பனைநிலைய வாயிலை அவதானித்ததோடு,

மாலை 6.00 மணிக்கு மர்மமான முறையில் உயர்ந்த பாதுகாப்பு மதில்கள் அமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தினுள் உள்நுழைந்து தனது கைவரிசையை காட்டி ரூபா 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளான்.

திருடன் ஒருவன் விற்பனை நிலையத்தினுள் நுழைந்து ஆராய்வது அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. கட்டுமான பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில்,

நேற்று மாலையே விற்பனை நிலைய சிசிடிவி கேமராக்களை அவதானித்ததாகவும், அதன் பின்பு பணத்தை பார்வையிட்டதாகவும், குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *