முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர், மகிந்த ராஜபக்சவுக்கு நல்ல காலம் பிறக்க உள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினம் ஆகும் .
விட்டுக்கொடுக்கும் தினேக்ஷ் குணவர்தன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணிக்கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தற்போது பிரதமராக பதவி வகித்து வருகிறது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக மீண்டும் பதவிக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டதால், பிரதமர் பதவியை அவருக்கு வழங்க தினேஷ் குணவர்தன இணங்கயுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment