Press "Enter" to skip to content

போதைக்குள்ளாக்கி 18 வயது யுவதி வன்கொடுமை! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

18 வயது யுவதியை போதைக்குள்ளாக்கி வன்கொடுமைக்கு உட்படுத்திய யுவதியின் காதலன் எனக் கூறப்படும் 19 வயதான இளைஞன், பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பு

இக்கொடூரச் சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட யுவதி கொழும்பு பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஜூன் மாதம் பாதிக்கப்பட்ட யுவதி சந்தேக நபருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

போதைக்குள்ளாக்கி 18 வயது யுவதி வன்கொடுமை! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Drugged 18 Year Old Girl Brutality

அதன் பின் ஒரு மாதத்துக்குப் பின்னர் சந்தேக நபரான இளைஞர் யுவதியை பாணந்துறையிலுள்ள நண்பனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சந்தேக நபர் கோப்பையில் ஏதோ ஒன்றை ஊற்றி யுவதிக்கு கொடுத்துள்ளார்.

அதை அருந்திய பின்னர் யுவதி நினைவிழந்த யுவதியை  துஷ் பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து  சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *