Press "Enter" to skip to content

பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்த உரிமையாளருக்கு விளக்கமறியல் – யாழ் நீதிமன்றம் உத்தரவு

மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோ, பாவனைக்கு உதவாத பெருந் தொகையான பழப்புளியை பொதியிட்டுக் கொண்டிருந்த போது ,நேற்று மாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினர் முற்றுகையிட்டனர்.

களஞ்சிய உரிமையாளருக்கு எதிராக இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ் நகர பொதுச் சுகாதார பரிசோதகர் சஞ்ஜீவனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் களஞ்சிய உரிமையாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் உத்தரவிட்ட யாழ்ப்பாண மேலதிக நீதவான் நளினி சுபாஸ்கரன் நவம்பர் 9ம் திகதி வரை குறித்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *