Press "Enter" to skip to content

வீட்டுக் கதவை உடைத்து உள்நுழைந்து 80 வயது மூதாட்டி மீது பலாத்காரம்! 38 வயதான இளைஞர் கைது..

80 வயதான மூதாட்டி ஒருவரை பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டில் 38 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இரவு வேளையில் அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த 38 வயது இளைஞன் அவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருமணமானவர் என்றும், பாதிக்கப்பட்ட மூதாட்டியும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தொிவித்திருக்கும் பொலிஸார்,

தினக்கூலி தொழிலாளியான சந்தேக நபர் கடந்த 13ம் திகதி இரவு மூதாட்டியின் வீட்டுக் கதவை உடைத்து வலுக்கட்டாயமாக அவரின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர்

அவரைத் தாக்கி அவரின் பற்களை உடைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது பிரதேசவாசி ஒருவர் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வழங்கிய தொலைபேசி அழைப்பின் பிரகாரம்

உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மூதாட்டியை மீட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு குறித்த நபரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *