Press "Enter" to skip to content

வவுனியாவில் சம்பவம், வெட்டுக்காயங்களுடன் வீதியில் கிடந்த இருவர்

வவுனியா – சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் வீதியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியூடாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சென்று கொண்டிருந்த போது வீதியில் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட நபர் ஒருவரை அவதானித்ததும், நோயாளர் காவு வண்டியை வரவழைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். அத்துடன் வெட்டுக்காயங்களுக்குள்ளான மேலும் ஒருவர், அப் பகுதி மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போத்தல்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினால் இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 50 மற்றும் 53 வயதுடைய இருவரே இவ்வாறு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *