வவுனியாவில் வன்முறையில் ஈடுபட்டதற்காக ‘கெத்து பசங்க’ என்ற வாட்ஸ்எப் குழுவைச் சேர்ந்த 18 வயதுடைய 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத போதை மாத்திரைகளை, தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய ஒருவர், கடந்த ஜனவரி 5 ஆம் திகதியன்று பூவரசங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவரது தொலைபேசியில் வாள்வெட்டு உருவங்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில், வாட்ஸ்எப் குழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தியதில், அவர்கள் பூரவசங்குளம், தட்டான்குளம், செட்டிகுளம் ஆகிய இடங்களில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, நான்கு கையடக்கத் தொலைபேசிகள், போதை மாத்திரைகள், கூரிய ஆயுதங்கள் மற்றும் வாள்களுடன் 18 வயதுடைய 6 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பூரவசங்குளம் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன
Be First to Comment