வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பு 7 குதிரை பந்தைய திடலின் அருகில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞானபீட மாணவியான இவரின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும்
பொலிஸார் கூறுகின்றனர்
Be First to Comment