கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மோட்டார்சைக்கிளில் வந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
காரில் பயணித்தவர் காயம்
சம்பவத்தில் காரில் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
Be First to Comment