Press "Enter" to skip to content

காதலியுடன் கள்ளத் தொடர்பு; பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்!

நுவரெலியா பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றுக்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

காதலியுடன் கள்ளத் தொடர்பு; பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்! | Development Officer Attacked The Police Constable

கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் காதலி என கூறப்படும் யுவதியுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் காதல் கொண்டுள்ளதாக , சந்தேக நபர் தவறாக புரிந்து கொண்டு இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *