பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் 47 வயதுடைய நபர் ஒருவரை மிஹிந்தலை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
மிஹிந்தலை, தொரமடலாவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமது தாயுடன் வசித்து வந்த குறித்த பெண் நேற்று வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
அதன்போது, பக்கத்து வீட்டில் வசித்துவந்த சந்தேக நபர், குறித்த வீட்டுக்குச்சென்ற அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளியில் சென்று வீடு திரும்பிய குறித்த பெண்ணின் தாய் வீடு திரும்பி பார்த்தபோது, மகள் படுக்கையில் சுயநினைவின்றி இருப்பதையும், சந்தேக நபரும் வீட்டில் இருப்பதையும் பார்த்துள்ளார்.
இதனையடுத்து, அவசர நோயாளார் காவுவண்டியை அழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்து மருத்துவ உதவியாளர்கள் அந்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதி செய்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த மிஹிந்தலை காவல்துறையினர் சந்தேகநபரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Be First to Comment