தொழிலாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் சில வழக்குகள் ஐந்து முதல் பத்து வருடங்கள் பழமையானவை என்றும் தொழிலாளர் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,தொழிலாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பல்வேறு அநீதிகள் தொடர்பாக தாக்கல் செய்த இருபத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இவ்வாறு நிலுவையில் உள்ளது.
தொழில் தகராறு
ஏனைய வழக்குகளுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்னுரிமை கொடுப்பதால் தொழிலாளர் வழக்குகளில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.
இதன் காரணமாகவே 2022ஆம் ஆண்டு தொழில் தகராறு, சட்டத்தில் திருத்தங்கள் ஒன்றாக நிறைவேற்றப்பட்டன.
இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், இந்த வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
திணைக்களத்தால் ஒதுக்கப்பட்ட வழக்குகள்
மேலும், தனியார் மற்றும் அரச ஊழியர்களிடமிருந்து உரிமைப் பலன்களைப் பெறாதது தொடர்பாக தொழிலாளர் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்ட 4,596 வழக்குகள் கடந்த ஆண்டு செயலிழந்ததாக கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்குகளில் சுமார் முப்பது வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட வழக்குகள் பலவும், செயலற்ற வழக்குகளின் நிதி மதிப்பு 1.74 பில்லியன் ரூபா என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த 4596 வழக்குகள் தொடர்பாக 2325 திறந்த பிடியாணைகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Be First to Comment