ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் கொழும்பு – கெம்பல் மைதானத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்துரைத்திருந்தார்.
கடந்த கால போராட்டங்கள் தங்களை அச்சுறுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டது.
நாம் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முக்கிய விடயமொன்றை தெரிவிக்க விரும்புகின்றோம்.
வீடுகளை எரிப்பது மட்டுமல்ல, எங்களை கொன்றாலும் அவர்களுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளிக்க போவதில்லை.
எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளதுடன், தங்களது அரசாங்கமே உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்
Be First to Comment